பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு அடிகளார்



1729. “கடமைகளின் வழி உரிமை பெறுவது - கற்பின் வழி மகப்பேறு பெற்றார் போல.”

1730. “கருப்புப்பணம் என்பது - கர்ணன் பிறந்தது போல - வாழ்ந்தது போல:”

1731. “வளர்ச்சிக்குரிய உணர்வுகளை நாள் தோறும் பெற்று வளர்ந்தால்தான் - வெற்றிகள் கிடைக்கும்.”

1732. “வாழ்க்கையில் தேக்கம் கூடவே கூடாது.”

1733. “பலர் வேலை செய்வதாகத் தெரிகிறது. ஆனால் கணக்குப் பார்த்தால் நல்ல விடை கிடைப்ப தில்லை. சரியான நேரத்தில்-சரியான முறையில் சரியான அளவுக்குச் செயற்படாததே காரணம்.”

1734. “நமது அரசு இயந்திரம் பெரும்பாலும் பழுதாகிவிட்டது.”

1735. “இன்று அரசு இயந்திரத்தை இயக்குவது இலட்சியங்கள் அல்ல-இலட்சங்கள்.”

1736. “நல்லவன் அறிவுரைக்கு ஆட்பட்டுச் செய்வான். கெட்டவன் தண்டனைக்கு ஆட்பட்டு செய்வான்.”

1737. “நமது நாட்டின் வரப்புக்களிலே ஆயிரக் கணக்கான ஏக்கர்கள்.”

1738. “செல்லாக் காசை யாரும் விரும்புவதில்லை. ஆனால், செல்வம் பெருகப் பயன்படாத-செலாவணியில்லாத வாழ்வை விரும்புகின்றனர்.”

1739. “உழைக்காதவன் வாழ்க்கை செல்லாக் காசு.”

1740. “தன்னலத் தீங்கில்லாத சிலர் சிறிய பிறர் நலப் பணிகளைக் கூடச் செய்வதில்லை. அந்த அளவுக்கு சமூக உணர்வு இல்லை.”