பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

191



1887. “வாழ்க்கையில் உன்னுடன் ஏதாவதொரு நோக்கத்தில் உடனுழைப்பவர்களாகப் பணியாளர்கள் அமைந்தால் நல்லது. வேலையை, வேலைக்காரர் என்ற மனப்பான்மையில் பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு விதமான வேசைத்தனமாகும்.”

1888. “இன்னமும் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை.”

1889. “புரட்சித் தலைவர் மதுவிலக்கைமட்டும் ரத்து செய்யாமல் இருந்திருந்தால் மக்களிடம் மிகப் பெரிய அன்பைப் பெற்றிருப்பார்.”

1890. “ஒத்துவராத செய்திகளில் தொடக்கத்திலேயே கண்டிப்பு இல்லாதிருத்தல் தவறு. பின் விளைவுகள் மோசமாகிவிடும்.”

1891. “செய்திகள், உண்மைக் கலப்புடையன. வதந்திகள்.பொய்மையும் புனைந்துரையும் கலந்தவை.”

1892. “அமெரிக்கா ஒதுங்கி விட்டாலே இலங்கைச் சிக்கல் தானே தீர்ந்துவிடும்.”

1893. “விலங்குகளுக்குள்ள உறவுணர்வு, மனிதர்களிடம் இல்லை.”

1894. “வேலை செய்பவர்கள் எல்லாம் உழைப்பாளிகள் அல்லர்.”

1895. “பலனைக் கணக்கிட்டுத்தான் உழைப்பின் மதிப்பைக் கண்டுபிடிக்க முடியும்.”

1896. “இந்திய வாக்கரளர்களிடம் “அகட விகடங்கள்” செல்லு படியாகவில்லை,”

1897. “ராஜீவ் காந்தியின் பேச்சு, பழைய நாட்டுத் தலைவர்களை நினைவிற்குக் கொண்டுவருகிறது.”