பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

25



176. “ஒருமைப்பாட்டுணர்வு அருள் நிலைக்கு அழைத்துச் செல்லும்”.

177. “புறத்தே வளர்ந்துள்ள நம்மவர்கள் அகநிலை நாகரிகத்தில் மோசமாக உள்ளளர். புறத்தே வளராத ‘ஜரவாக்கள்’ அகநிலையில் நாகரிகமாய் உள்ளனர்.”

178. “அந்தமான் தீவு-பூர்வீக குடிகளாகிய ஜரவாக்கள்'மத்தியில் சண்டையில்லை.

179. “இறைவனே! உறுப்புக்களை மறைத்து, உடை உடுத்தி நாகரிகமானவன் என்று நாடகம் நடத்திவருகின்றேன்! ஆனால் உணர்வுகளை மறைத்துக்கொள்ள கற்றுக் கொண்டேனில்லை, ‘ஜரவா’ பழங்குடி மக்களோ உறுப்புக்களை மறைத்தார்களில்லை! ஆனால் உணர்வுகளை மறைத்து வாழ்கின்றனர். ‘நான்’ என்ற உணர்வு அற்ற நிலையில் உன்னை அடைவேன்’.

180. ஒவ்வொருவரும் தம்தம் நிலையில் சாமார்த்திய சாலிகளாகவே நடந்து கொள்வதாக நினைக்கின்றனர். ஆனால் அவலத்தின் மொத்த உருவம் அவர்கள் தான்!”

181. “சிறுபான்மையாக வாழும் பகுதியில் வாழ்வது ஒரு வசதி. எளிதில் பெருமை பெறலாம்.”

182. “பட்டுப் பூச்சிகள் கூட நேர்த்தியான பட்டு நூல்களை உற்பத்தி செய்கின்றன. ஏன், ஆறறிவு படைத்த மனிதர்கள் நேர்த்தியான காரியத்தைச் செய்வதில்லை?”

183. “வழிபாட்டுத் திருமேனிகளில் சிதைவு ஏற்பட்டால் உருவங்களை மாற்றுதல் தவறு.”