பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு அடிகளார்


குழந்தைகளின் அறியாமையை நீக்கும் ஆசிரியர்களை நாடுவதில்லை.”

463. “திருத்தம் காணும் முயற்சி இல்லாதவர்கள் கையாளும் யுக்தியே, தோல்விகளுக்கு-குற்றங்களுக்கு காரணங்கள் காட்டி அமைதிப்படுத்துதல்.”

464. “நல்ல ஊற்றுள்ள கிணறு, பெருமழைக் காலத்திலும் தம் அளவிலேயே நிற்கும். பொங்கி வழிந்துவிடாது. புதிதாக வரும் தண்ணிரை உள் வாங்கிக் கொள்ளும். அதுபோல அறிவும் செல்வமும் உடையவர்கள் எப்போதும் அளவோடு வாழ்வார்கள் ஆர்ப்பரவம் இருக்காது!”

465. “கிணற்றில் ஊற்றளவு சீராக இருக்குமானால் வந்து கலக்கும் புதுத் தண்ணிருக்கு ஏற்ப நிறம் மாறாது. அதுபோலச் சூழ்நிலைகளால் நல்ல திடமான மனிதர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.”

466. “கதிரவன் ஒளிபுகாத எதுவும் பயன்தராது. அதுபோல அறிவொளி பெறாத எந்த மனிதனும் பயன்படமாட்டான்.”

467. “ஒருவர் திட்டுவதால் வந்துவிடுவதல்ல, அவமானம் என்பது. அறிவும் ஆளுமையும் பெற்றிருந்தும் சமுதாய மாற்றம் காண முடியாத நிலையே அவமானம்.”

468. “வெளிப்பாடுகள் எல்லாம் அழுக்காற்றைத் தோற்றுவிக்கும். ஆதலால், வெளிப்பாட்டைத் தவிர்த்திடுக! பணிகளுக்குள்ளே ஒளிந்துகொண்டு உருப்படியாக எதையாவது செய்க.”