லா. ச. ராமாமிருதம் 59 ஒரு ராணியாம், இதுவும் நதியில் நிகழ்ந்துகொண்டிருக் கிறது. காலமெனும் முப்பட்டகத்தில் இம்மி அசைவுக்கும் கூடின யுகத்தில் கூடினமே யுகம். யுகமே முகம் எனக் காட்சி மாறியபடி இருந்துகொண்டிருக்கும் இந்த Keleidoscope opš GT5 ILjenigis uufrif? -பழைய ஆகமம், புது ஆகமம், eேnesis மத்தேயு, Psalms... -ஸ்ரி கம பத நி வித வித கானமு வேதலாரம் -பார், பார், பார் ? எனக்கு இது ஒரு வியப்பு. ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு? வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம். - அனுபவம், நினைவு கூட்டல், மறு உரு, கதை- வாழ்க் கையின் இன்றியமையாத அம்சங்களாகத் திகழ்கின்றன. அனுபவத்தில் என்னைக் கண்டு பயப்படுகிறேன். கதையெனும் மறு உருவில் என்மேல் ஆசை கொள் கிறேன். பாஷையின் ரஸவாதம். அனுபவத்தில் நான் என் பேதைமைகளுடன் அம்மணம். கதையில் நான் நாயகன். -ராமன், அர்ச்சுனன், அபிமன்யு, அலெக்சாண்டர், ரஸ்டம், லோரப், பீஷ்மன், பிருத்விராஜ் இவர்களைப் போல் நான் இருக்க விரும்பும் ஆசையில், திரும்பத் திரும்ப இவர்களை நினைவு கூட்டலினாலேயே இவர் களாக மாறி விட்டதாக ஆசையின் நிச்சயத்தில்,