பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. க. ராமாமிருதம் * 93 உட்கார்ந்திருந்த ஒரு யுவதி என்னைப் பார்த்தும் வெடுக்கென எழுந்தாள். "இந்திரா, This is the famous gorr. gr. grrr.” வந்த கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன், முதலில், அப்போது நான் Famous இல்லை 'இப்போ மட்டும்?” என்று கேட்டு விடாதீர்கள். மேலே சொல்லனும் இரண்டாவது. இது போன்ற அறிமுகம் எனக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அவன் படும் பெருமைய, சந்தோஷத்தைக் கெடுக்க முடியுமா? இருவரும் அவர்கள் குல முறையில், காலில் விழுந்து, ஐந்து முறை கும்பிட்டுக் கும்பிட்டு, சேவித்தனர். இந்திரா- இட்ட பெயரா, அழைக்கும் பெயரா, இன்னமும் அறியேன். அவ்வளவு இளவயதில், அந்த 'ஐயங்கார் கட்டுக்கும் சுயமான துருதுருப்புக்கும்- ரம்மி யம் என்ற வடமொழிக்கு அதே ஒசைருசி, பொருள் நளினத்துடன் நேர் தமிழ், தெரிந்தவர் சொல்லுங்களேன்! அறிவுப்பூர்வமாக சம்பாஷிக்கத் தெரிந்து, மரியாதை யும் தெரிந்து, பெண்மையின் பிகு குறையாமல், இன் முகம், பண்பு, உபசரிப்பும் கூடிவிட்டால், - அதெல்லாம் புண்ணிய சமாச்சாரம், எல்லாருடைய அதிர்ஷ்டமல்ல. அவள் என் கதைகளைப் படித்தவள் அல்லள் ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. நான் சாப்பிடுவதற்கு இலை வாங்கச் சீனு போனான். போகும்போது எனக்கு ஜாடை காட்டிவிட்டுப் போனான். 'தக்குணுண்டு சாமிக்குத் துக்குணுண்டு நாமம்-ஒரு குட்டி அறைக்குள் ஒரு குஞ்சான் அறை. அவர்கள் ஆண்ட இடம் அவ்வளவுதான்- உள் அறையில் எட்டிப் பார்த்தேன். குழந்தையை மடியில் போட்டுத் துரங்கப்