411
பொதிந்த பூனொடும் ஏது மின் எனக்களி பொங்கி
அதிர்ந்திடக் கரமசைத்தல் போல் அசைந்தன கொடிகள்." [1]
"மதுக்கொண் மாளிகை நாற்றிதன் மணிபல குயிற்றிச்
செதுக்கி மின்னுமிழ் தமனியத் தகம்புகள் செறித்து
விதுக்கொண் மேனிலை மென்றுகண் மாசறத் துடைத்துப்
புதுக்கு வான் தொழில் புரிந்தபோல் அசைந்த பொற் கொடிகள்."[2]
"சிவந்த பாதபங் கயநபி திருநகர்ப் புறத்துக்
கவிந்த கார்ச்குடை நிழலிட வருவது கண்டு
நிவந்த வெண்சுதைப் பளிக்கு மேல் நிலை வயின் நின்று
குவிந்த கைவிரித் தழைத்தபோல் அசைந்தன கொடிகள்," [3]
உகுதுப் போர்க்களத்தில் இருவகைக் கொடிகளைக் காட்டுகின்றார். அவற்றில் ஒன்று:
"அல்லும் கல்லும் ஒத்தனமனக் குபிரவர் படையில்
செல்லு செல்லுமென் றேவின விசிறியின் திரள்கள்
கொல்லுங் கொல்லுமென் றுரைத்தன பல்லியங் குமுறல்
வெல்லும் வெல்லுமென் றாடின விடுநெடுங் கொடிகள்" [4]
இப்பாடலில் "முஸ்லிம்களே! வெல்லுங்கள்! வெல்லுங்கள்!" எனறு கரமசைத்து ஊக்குவிக்கும் கொடிக்கரங்களைக் காணுகிறோம்.