பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


        2.ஆணோ பெண்ணோ
                    அலியேதானோ!

தமிழ் சினிமாக்களில் வந்து வந்து போகின்ற கடவுளர்கள்....மும்மூர்த்திகளையும் சில்லரைத்தெய் வங்களையும் காண்கின்ற கலாரசிகர்களின் மனதிலே எவ்வளவோ எண்ணங்கள் குமிழிடுகின்றன. அவற் றில் எல்லாம் மேலாயது இந்தக் கடவுள்களில் சில சாமிகள் அல்லது ஆசாமிகள் ஆணா, பெண்ணா அல்லது அலியோ என்ற ஐயமே முக்கியமாக கிருஷ் ண ன் நாரதர் இவ்விரண்டு அப்பாவித் தெய்வங் களும் படுகிற பாட்டை அறியும் போது பூலோகத் தபால் பெட்டிகளாகவும் ஆகாயலோகக் கம்பியில் லாத் தந்தியாக நூலணிந்து பம்மாத்துப்பண்ணியும் திரிகிற வர்களை பிடித்தாவது, வறட்டுத் தவளைக் கூச்சலில் விளங்காத தேவபாடையில் ஏற்றியாவது அநுதாபங்கள் கணக்கற்ற முறையில் பார்சல் செய்து வைக்க வேண்டும் அந்த சாமிகளுக்கு என்று தோன்றுகிறது!

    கண்ணன் உருவம் கவியுள்ளம் சிருஷ்டித்த கலைக்கனவு. அந்த எழில் பூத்த சிறுகையும், பால் வடியும் வதனமும் சுந்தர உருவும் கிண்கிணி ஆர்ப்ப அசையும்,சிறுநடையுமாகத் திகழவேண்டிய கண்ணன் பெயரால் வெள்ளித் திரையிலே, துள்ளும் குதிர்களை யும், புளிமூட்டைகளையும், பொத்தப் பூசணிக்காய் களையும் இன்னும் விவரிக்க இயலாக்கோரங்களையும் ஆடவிடுகிறார்கள் பட உலக பிரம்மாக்கள்.

ரசிகர்களின் மதிப்பை ஒரு நட்சத்திரம் பெற்றிருப்பாள். அவள் சுந்தரப்புன்னகையில் மயங்கிய