பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மட்டும் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பீர்களா?” என்று தயவாய்க் கேட்டான்.

பணக்காரரின் மனம் உடனே இளகிவிட்டது. "சரி வா" என்று பெண் வேஷத்திலிருந்த அதந்தப் பையனை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த பெண்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பணக்காரருடைய பெண்களும் அவனை ஒரு பெண் என்றே நம்பிவிட்டார்கள். அவனிடம் அன்பாகப் பேசினர்கள். தின்பதற்குப் பலகாரங்கள் கொடுத்தார்கள். அவனுடன் சேர்ந்து விளையாடினர்கள். மூன்று மணி நேரம் இப்படி ஒடிவிட்டது.

அப்போது, "தம்பி! தம்பி!" என்ற குரல் தெருவிலிருந்து வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும், பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையன், "அண்ணா, இதோ வந்து விட்டேன்!" என்று கூறிக்கொண்டே எழுந்தான். தன்னைத் தேடிக்கொண்டு வந்த அண்ணன் வாசலில் நிற்பதைக் கண்டான். உடனே வாசலை நோக்கி ஓடினான். அப்போதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது. அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். அன்று முதல், அந்தப் பணக்காரர் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதே இல்லை.

அன்று மாறுவேஷம் போட்டுப் பணக்காரரின் மனத்தை மாற்றிய அந்தப் பையனின் பெயர் உங்களுக்குத் தெரியுமா? 'கதாதரன்' என்பதுதான் அவனுடைய பெயர். அந்தப் பெயர்தான் பிற்காலத்தில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்ஆகிவிட்டது!

8