பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

முரட்டுப் பையன்
    அவனுக்கு வயது ஏழு அல்லது எட்டுத்தான் இருக்கும். அந்த வயதிலே அவன் மகா முரடனாக இருந்தான். எல்லாருடனும் அடிக்கடி சண்டை போடுவான். சண்டையென்றால் வெறும் வாய்ச் சண்டையல்ல; கைச் சண்டை!
    அவன் பணக்கார வீட்டுக் குழந்தையாக இருந்ததால், அவனிடம் ஏராளமான பொம்மைகள் இருந்தன. அந்தப் பொம்மைகளில் மனிதப் பொம்மைகளையெல்லாம் போர் வீரர்களைப் போல் அணிவகுத்து நிறுத்தி வைப்பான். பிறகு டமாரப் பொம்மையை எடுத்து, 'டம் டம், டம் டம்’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு அடிப்பான். ஊது குழலால் பலங்கொண்ட மட்டும் ஊதுவான். இவையெல்லாம் எதற்கு? அவன் போருக்குக் கிளம்பிவிட்டான் என்பதை அறிவிப்பதற்காகத்தான்! யாருடன் அவன் போர் புரியப் போகிறான்? கூடப் பிறந்த தம்பிகளுடனும், அண்டை வீட்டுப் பிள்ளைகளுடனும்தான்!"
    இப்படிப்பட்ட முரட்டுப் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தால், அவன் அங்கே போய் ஒழுங்காகப் படிப்பானா? தினமும் மற்ற மாணவர்களுக்கு அவன் தொந்தரவு கொடுத்துக்கொண்டேயிருப்பான், ஆசிரியர்களையும் எதிர்த்துப் பேசுவான். இதனால் ஆசிரியர்கள் அவனுக்கு அடிக்கடி தண்டனை கொடுத்துவந்தார்கள். எதற்காக அவர்கள் தண்டனை கொடுக்கிறார்கள் என்பதை அவன் யோசித்துப் பார்ப்பதேயில்லை, வீணாக ஆத்திரப்படுவான். அவர்களைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று நினைப்பான்.

அந்த ஆசிரியர்களில் ஒருவர் அவனை அடிக்கடி கண்டித்து வந்தார். அவரை எப்படியாவது பழிக்குப் பழி வாங்கிவி.. வேண்டுமென்று அவன் கங்கணம் கட்டிக்

23