பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 “ஏண்டியம்மா உனக்குப் பேர் வரப்போகிறதாம்; புகழ் வரப் போதேநாம், அப்படியானுல், நீ பெரிய சிமரட்டியாகி விடுவாமோ?என்று கேலியாகக் கேட்டாள் ஒரு பெண்.

    “இல்லையடி இல்லை, இவள் பட்டத்து ராணியாகப் போகிறாள். பார்த்துக்கொண்டே இரு” என்று இன்னொருத்தி கிண்டலாக் கூறினாள். சொல்லிக் பியிருந்தால் வாங்கிப் போட்டிருக்கலாம்.
    இதேபோல் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக்க் கூறிக்கேலி செய்தாள். ஆனால் எவளுமே, 'இவள் பெரிய விஞ்ஞானியாகப் போகிறாள்!' என்று சொல்லிக் கேலி செய்யவில்லை. அப்படி எவளாவது சொல்லியிருந்தால் அவள் வாய்க்குச் சர்க்கரை வாங்கிப் போட்டிருக்கலாம். ஏன் தெரியுமா?

அந்தச் சுருட்டை மயிர்ப் பெண் பெரியவளானதும் ஒரு பெரிய விஞ்ஞானியாகவே விளங்கினாள். ஆமாம், இப்போது புற்றுநோயைக் குணப்படுத்தவும் வாந்திபேதி, எலும்புருக்கிக் காய்ச்சல் முதலியவற்றிற்குக் காரணமான கிருமிகளைக் கொல்லவும் உபயோகப் படுத்துகிறார்களே ரேடியம், அதைக் துடுபிடித்தவளே அந்தச் சுருட்டை மயிர்ப் பெண்தான்! அவளுக்கு ஒரு முறையல்ல; இருமுறை நோபல் பரிசு கிடைதது இருக்கிறது. வேறு எவருக்கும் அப்படிக் கிடைத்ததில்லை, ஆனாலும், அவளுனைய தோழிகள் சொன்னது போல் மிர்ஜா என்று சொன்னால், அவளே உங்களுக்கு தெரியாது. மாடம் கியூரி என்று சொன்னால் நன்றாகத் தெரியும். அப்படித்தானே!

22