பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்று சார். பதின்மூன்ரு சரி, நீ இன்டர் எங்கே படித்தாய்: வால் டயரில் சார். ’ உன் பெயர் என்ன? ராமன் சார்.’ இவற்றைக் கேட்டதும், அந்தப் பேராசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் மட்டுந்தான ஆச்சரியப் பட்டார்? எல்லாருமே ஆச்சரியப்பட்டார்கள். அ ன்று முதல் ஆசிரியர்கள் யாவரும் அவனிடத்திலே அதிகமாக அன்பு காட்டினுர்கள். அவன் விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்தினர்கள். இப்படி, தனது பதின்மூன்ருவது வயதிலே எல்லா ருடைய உள்ளத்தையும் கவர்ந்த அந்த ராமன் யார்? வேறு யாருமல்ல; நோபல் பரிசு பெற்ற நம் தமிழ் நாட்டு விஞ்ஞானி சர். சி.வி. ராமனேதான்! 66