பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 ஆர்லோவ் தம்பதிகள் வைக்கிற போது அவர்கள் பணம், மருத்து, உபதேசம் எல்லாம் அளிக்கிறார்கள். அதைப் பார்க்கிற நமக்கு அழ வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள்.” "அழவா? அது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவ்வளவு தான்" என்றான் கிரிகரி. அவன் தன் தோள்களைக் குலுக்கினான் தலையைச் சொரிந்தான், தெளிவில்லாமல் தன் மனைவியை நோக்கினான். திடீரென்று பெற்று விட்ட வாக்கு வன்மையோடு அவள் பேசத் தொடங்கினாள். மக்களிடம் அனுதாபம் காட்ட வேண்டியது அவசியம் என்று அவனுக்கு உணர்த்த விரும்பினாள். அவள் அவன் பக்கமாக சரிந்து, தனது மென்மையான பார்வையை அவனது முகத்தில் பதித்தவாறே, மக்களைப் பற்றியும், அவர்களுடைய வாழ்வின் கொடுமைகளைப் பற்றியும் அவள் பேசினாள். அவன் அவளேயே விழித்துப்பார்த்துக் கொண்டிருந்தான்."இவள் நன்றாகப் பேசுகிருளே! இவ்வார்த்தைகளே எல்லாம் இவள் எங்கிருந்து பெற்றாள்?" என்று அவன் நினைத்தான். "நீ கூட அவர்களுக்காக அனுதாபப்படுகிறாய். உன்னிடம் பலம் இருக்குமானால் காலராவின் உயிரைப் பிழிந்து எடுத்து விட முடியும் என்று நீ சொல்ல வில்லையா? ஆனால் நீ என் அப்படிச் செய்ய வேண்டும்? காலரா வந்த பிறகு தானே உன்னுடைய வாழ்க்கை உயர்நிலை அடைந்திருக்கிறது!” கிரிகரி உரக்கச் சிரித்தான். "அது உண்மை தான். நிலைமை முன்னைவிட நன்றாகத் தான் இருக்கிறது. எல்லாம் நாசமாகட்டும் ஜனங்கள்