பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்தருக்குள் தெய்வம்தன்னைக் காண முடியுமா?-நல்ல வழியைக்காட்டும் ஒளியைநாமும் காண முடியுமா? அம்மா காந்தியைப்போல் ஒருமகானை இந்த உலகிலே காணமுடியும் காணமுடியும் கண்ணே, கேளடா. உண்மைபேசும் இடத்தில்காந்தி குடியிருக்கிறார். உறுதிஉள்ள இடத்தில்காந்தி குடியிருக்கிறார். அன்புபொங்கும் இடத்தில்காந்தி குடியிருக்கிறார். அகிம்சைஉள்ள இடத்தில்காந்தி குடியிருக்கிறார். உண்மை, உறுதி, அன்பு, அகிம்சை உன்னி டத்திலே உள்ளதென்றால் உன்னிடத்தும் காந்தி இருக்கிறார். என்றும்அவரைக் கண்டுகொண்டு இன்பம் கொள்ளலாம். இதயக்கோயில் தன்னில்வைத்துப் பூசை செய்யலாம். 118