பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து மாரி அம்மனுக்கு மிகமிகச் சீருடன் சிறப்பாகப் பத்து நாட்கள் திருநாளாம்; பலரும் பார்த்து மகிழ்வாராம். கணித மேதை கதிரேசர் கருத்துடன் பிள்ளைகள் படித்திடவே. புனித மான காந்திமகான் பெயரில் பள்ளி நிறுவினரே. பொன்னாச் சியெனும் ஊருணியின் பொன்னைப் போன்ற நிறமுள்ள தண்ணி உண்டு; ஊர்மக்கள் தாகம் தீர்க்கும் குணமுண்டு. வாரச் சந்தை புதன்கிழமை; வருவார் மக்கள் திரளாக. கீரை முதலாய் அரிசிவரை கிடைக்கும் அந்தச் சந்தையிலே! அம்மன் கோயில் முன்னாலே ஆடிப் பாடித் தோழருடன், சின்ன வயதில் திரிந்ததனை எண்ணும் போதே இனிக்கிறதே! கதிரேசர்