பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தைக்குப் போனேன் சந்தைக்குப் போனேன். சந்தைக்குப் போனேன் சாம்பல் பூசணி வாங்கிடவே சண்டைக்குப் போனேன், சண்டைக்குப் போனேன் தாய்த்திரு நாட்டைக் காத்திடவே. வெல்லத்தைப் பார்த்தேன்; வெல்லத்தைப் பார்த்தேன் வேலுச் சாமி கடையினிலே. - . வெள்ளத்தைப் பார்த்தேன் வெள்ளத்தைப் பார்த்தேன். விடாது பெய்த மழையினிலே. தவளையைப் பார்த்தேன்; தவளையைப் பார்த்தேன் தரையில் தத்திச் செல்கையிலே. தவலையைப் பார்த்தேன்; தவலையைப் பார்த்தேன் தங்கை துக்கி வருகையிலே. கொல்லையில் கிடைத்தது; கொல்லையில் கிடைத்தது கொத்துக் கொத்தாய் மல்லிகையே. கொள்ளையில் கிடைத்தது; கொள்ளையில் கிடைத்தது கொடியவ னுக்குத் தண்டனையே! 199