பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஆங்கிலத்தில் அணிந்துரை கேட்டதும், 'தமிழ் நூலுக்கு ஆங்கிலத்தில் அணிந்துரையா!' என்று வியப்புடன் கேட்டார். பிற மொழிகளில் என் பாடல்கள் வெளி வந்திருப்பதையும், பிறமொழி எழுத்தாளர்கள் பலர் எனக்கு அறிமுகமாகியிருப்பதையும் கூறி, 'தங்களைப் போன்று இந்தியா முழுவதும் அறிந்த ஒர் அறிஞர் ஆங்கிலத்தில் அணிந்துரை வழங்கினால், அவர்கள் என்னைப் பற்றியும் என் படைப்புகளைப் பற்றியும் ஒரளவு தெரிந்து கொள்ளக் கூடும் என நினைக்கிறேன்' என்றேன். பல்லாண்டுகளாக என் பாடல்களைப் படித்து என்னைப் பாராட்டி ஊக்கமளித்து வருபவர் அவர். அவரைப் போலவே, அவருடைய அருமை மகள் திருமதி பிரேமா நந்தகுமாரும் (யுனெஸ்கோவிற்காக பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்) என் பாடல்களைப் பாராட்டி வருபவர். என்னைப் பற்றியும் என் பாடல்களைப் பற்றியும் முன்பே அறிந்திருந்ததால், என் வேண்டுகோளை ஏற்று, சிந்தனையைத் துண்டும் வகையில் சிறந்த ஓர் அணிந்துரையை அவர் வழங்கியுள்ளார். இன்றுள்ள தமிழறிஞர்களில் மிகவும் பரந்த மனம் கொண்ட பண்பாளர் திரு. சிலம்பொலி செல்லப்பன் அவர்கள். இவருடைய நினைவாற்றல் வியப்புக் குரியது. நடமாடும் கவிதைக் களஞ்சியமாகவே இவர் விளங்குகிறார்.