பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


உடைந்த போது, பொருத்தமான கிளை ஒன்றை வெட்டி வரும்படி வேலைக்காரனை மலைக்கு அனுப்பினார் ஒருவர். நாள் முழுவதும் சுற்றித் திரிந்து விட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் வேலைக்காரன். “ஏன்” என்று வீட்டுக்காரன் கேட்டபோது அவன், “ப” வடிவ கிளைகள் ஏராளமாய் உள்ளன. ஆனால் அவை மேல்நோக்கி வளராமல், கீழ் நோக்கி 'ப' வளர்ந்துள்ளன" என்றான்.

112. வாத்திருந்த இடத்தில்...

'வாத்து’ இருந்த இடத்தில் ‘தாராக்கோழி’ ஒன்றினை விற்கச் சந்தைக்கு எடுத்துச் சென்றான் ஒருவன். சந்தையை அடைந்ததும் சிறுநீர் கழிக்க வாத்தினை வெளியே வைத்து விட்டுப் பொதுக்கழிப்பிடம் ஒன்றினுள் நுழைந்தான். கழிப்பிடத்தில் அவன் இருக்கும் போது வாத்தைத் திருடிக் கொண்டு அந்த இடத்தில் ஒரு தாராக் கோழியை விட்டுச் சென்றான் வேறொருவன்.

கழிப்பிடத்தை விட்டு வெளியே வந்த வாத்துக்கு உரிமைக்காரன் அந்த இடத்திலிருந்த தராக் கோழியைக் கையில் மீண்டும் எடுத்துக் கொண்டு "என்ன வியப்பு, நான் உள்ளே சென்று சிறுநீர் கழித்துவிட்டு வருமுன் வாத்தின் கனம் எடை குறைந்துவிட்டதே. பசியால் தான் கணம் குறைந்துவிட்டதோ!" என்று சொல்லிக் கொண்டே சென்றான்.

113. மூதாட்டி ஒருத்தி

வயதான் பேரிளம் பெண்ணொருத்தியை மண முடித்துக் கொண்டார் ஒரு முதியவர். முதலிரவில்தான், தன்