பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

11


நாமெல்லாம் ஒன்று என்பதால் ஒருவன் புலியின்மீது சவாரி செய்யுமுடியுமா?” என்று கேட்டான்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ‘செந்தேள்’ பலமாகச் சிரித்தார். “புலியின் முதுகில் மேலேறிச் செல்வது, இரண்டு உடல்களுக்கிடையே வேறுபாடு உண்டு என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒரு மனிதன் புலியால் விழுங்கப்பட்டுவிட்டால் அவர்கள் இருவரும் ஒன்றே” என்றார். இதனைக் கேட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

8. குடியை மட்டுப்படுத்தல்

‘நான்மாடத்தைச் சார்ந்த ‘சிற்றரசு’ மதுவை நேசித்தான். சாத்தூரில் அவன் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது, அவன் தனது மிதமிஞ்சிய குடிப்பழக்-