பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

57



56. அதை அகற்ற ஆய்வுரை

செல்வன் ஒருவனுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டது. கடினமான முயற்சிக்கும் (உழைப்பிற்கு) பின் அது வெளியேற்றப்பட்டது. அவர்படும் வேதனையைக் கவனித்து வந்த ஒருவர் சொன்னார், “அன்றாடம் அவற்றை அகற்ற நீங்கள் அல்லல் படுகின்றீர்கள் ஏன்? உங்களிடம்தான் செல்வம் இருக்கிறதே ஒரு வேலைக்காரனை நியமித்து அந்த வேலையைச் செய்யச் சொல்லக்கூடாதா?” என்று ஆய்வுரை வழங்கினார்.