பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

81





77. அரசனும் அரச உடையும்

தலை நகரிலிருந்து திரும்பிய பிச்சைக்காரன் மா மன்னனைத் தான் பார்த்த பெருமையினைப் பறைசாற்றிக் கொண்டிருந்தான். அரசன் அணிந்திருந்த உடையினைப் பற்றி அவனிடம் கேட்டபோது, அவன் சொன்னான், “பச்சை மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட மகுடமும் தங்கத் தகடுகளால் ஆன உடையினையும் அணிந்திருந்தார்” என்று. “தங்கத் தகடுகளால் ஆன உடையை அணிந்திருந்தால் அவரால் எப்படி குனிந்து தொழுதிட முடியும்?” என்றான். பிச்சைக்காரன் இதனைக் கேட்டு நகைத்தான், பின்னர் சொன்னான் “உனக்கு இந்த உலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. மன்னர் குனிந்து தொழவேண்டிய மனிதர் யாரும் இல்லை” என்று.