பக்கம்:சிரித்த நுணா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அன்பு 'இன்பம் பெருக்கி,நம் இல்வாழ்க்கை செப்பனிடும் அன்பை விளக்கி அழகாகப் பாடென்ற அன்பே! எனதுடலின் ஆவியே! கேட்பாய்நீ! அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை பாழாம்! கடல்வற்றி, நெய்தற் கழிவற்றிப் பாசி படர்ந்த இடமெல்லாம் பச்சை குலுங்க உயிர்தோன்றி, அந்த உயிரின் இணையால் உயிர்தோன்றி வந்த உயிரினத்தின் ஊடன்றே அன்பு பிறந்ததடி! அன்பே அதுமுதலாய் என்புதோல் போர்த்த உடலுயிரில் நின்றதுவே! என்னின் பத் தீந்தமிழே! இல்லாளே! வீட்டரசி! "அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க்(கு) என்புதோல் போர்த்த உடம் பென் றுரைத்தநம் வன்புலவன் வள்ளுவனின் வாய்மை மொழியேபோல் நீர்தேக்கி, நன்செய் நிலபுலத்தை உண்டாக்கி, ஊராக்கி, ஊருக் கரணமைத்தே அவ்வூரைச் சீராக்கி, வாழச் செழுமை பலவாக்கித் தேரோடு யானை செழுங்குதிரை காலாளும் போராட, மக்கள் புகழ்பாடத் தீந்தமிழைக் காராடு வானம் கவிழ்ந்த உலகினிவே எண்ணி வியக்க, இயலிசையைக் கூத்தையிங்குப் பண்ணுய்ந்த மேலோர் படைத்ததுவும் அன்பேயாம்! 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/11&oldid=828797" இலிருந்து மீள்விக்கப்பட்டது