பக்கம்:சிரித்த நுணா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னுட்டு மாணவர்காள்! தீந்தமிழின் செல்வங்காள்! சிறுத்தை காள்!நீர் இந்நாட்டைத் திருநாட்டை இன்றுள்ள தமிழ்நாட்டை எண்ணி எண்ணி முன்னாட்டின் வழிவந்த பொன் டைாய்ப் புதுநாடாய் முனைந்து நாளும் நன்னடாய் வளநாடாய் நல்லறிஞர் பெருநாடாய் ஆக்கல் வேண்டும்! செந்தமிழின் இலக்கியங்காள்! திருநாட்டுப் பெரும்படைகாள்! மான வர்காள்! நொந்தலுத்த தாய்நாட்டை தும்நாட்டைத் தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கம் எந்தெந்த நேரத்தும் சொல்லினிலும் செயலினிலும் இருக்க வேண்டும்! பந்திபந்தி யாய்எழுவீர்! பகையெல்லாம் அற்ருெழியும்! செழிக்கும் நாடே! தாய்மொழியின் தமிழ்மொழியின் வளர்ச்சியெலாம் தாயகத்தின் வளர்ச்சி யாகும்! சேய்களருந் தலைக்கடனும் செந்தமிழைத் திருநாட்டைச் செப்பஞ் செய்தல்! 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/80&oldid=828872" இலிருந்து மீள்விக்கப்பட்டது