பக்கம்:சிரித்த நுணா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மன்றம் வாழ்க! இந்நாடும் எந்நாடும் நாட்டில் வாழும் எழிற்சிறுவர் எழுச்சியினல் ஏற்றம் காணும்! தென்னடு தாய்நாடு தமிழர் நாடு திக்கெட்டும் புகழ்பரப்ப வேண்டு மென்ற பொன்னை எண்ணத்தை எண்மூ வாண்டாய்ப் புதுமுறையில் நாட்டிடையே புகுத்திப் போற்றி இந்நாளும் இயலிசைசுத் தளிக்கும் சென்னை மாணவர்மன் றம் வாழ்க வாழ்க நீடே! I பேச்சாலே, எழுத்தாலே, அழகு சிந்தப் பின்னுகின்ற கைத்தொழிலின் வளப்பத் தாலே மூச்சாகும் அரசுரிமை மக்கள் ஆட்சி முடக்கின்றி நிலைத்திருக்கச் செய்யக் கூடும்! வாய்ச்சொல்லாம் தெளிதேனுற் செயலாற் சென்னை மாணவர்மன் றம் காக்கும்; எதிர்க்கும் மாற்ருர் வீச்செல்லாம் தூளாக்கும்; அஞ்சா நெஞ்சு வெற்றிப்போர்த் தமிழ்ப்படையைக் கவிக்கும்! வாழி! பள்ளியிலே பயிலுகின்ற சிறுவர் நாளைப் பார்புகழும் சான்ருேராய்த் திகழ்ந்தால், வற்ரு வெள்ளத்தால், மிகுகாற்ருல், தீயால், மாற்ருர் வெஞ்சினத்தால் எதுவரினும் முறிக்கக் கூடும்! தள்ளாத வயதினிலும் தடியை ஊன்றித் தமிழுக்கும், தமைப்பெற்ற தாய்நாட் டிற்கும் உள்ளத்தைப் பெருமுழைப்பை நல்கி மன்றம் ஒம்புகின்ருர் மயிலேசிவ முத்து! வாழ்க! 3 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/82&oldid=828874" இலிருந்து மீள்விக்கப்பட்டது