பக்கம்:சிரித்த நுணா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுக்கே உயிர்வாழும் மக்கள் பல்லோர் தமையணுகிக் கருத்தோதி விளக்கம் சேர்த்துத் தமிழுக்கே உயிர்வாழும் தம்மை யொத்த தமிழ்பயிற்றும் கணக்காயர் கூட்டம் கூட்டித் தமிழ்நாட்டு மாணவர்கள் தேவைக் கேற்பத் தமிழ்மொழியை, இசைவளத்தை, அரிய பேச்சைத் தமிழ்நாட்டின் உயர்வுக்கே முறையாய்த் தந்த தமிழ்த்தாத்தா மயிலைசிவ முத்து வாழ்க! 4. மன்றத்தின் பெருந்துணைக்குத் தாய்மார் கூட்ட மணிவிளக்குத் தருமாம்பாள்: உழைப்பின் மேன்மை குன்ருத நல்லறிஞர் வல்லை; ஆன்ற கூர்த்தமதிக் கலைவிளக்கம் உலக நாதன்; என்றைக்கும் சிரித்தமுகம் இனிய செஞ்சொல் இருப்பிடமாம் வில்வபதி; இவர்க ளோடு நன்ருற்றும் செயல்வீரர், ஊக்கம் குன்ரு நல்லோர்கள், உழைப்பாளர் வாழ்க! வாழ்க! 5 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/83&oldid=828875" இலிருந்து மீள்விக்கப்பட்டது