பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சிறந்த சொற்பொழிவுகள்

சிவல்லுஞ்சொல் இதுவேயென் றறிந்து பேசி

வியப்பினிலே ஆழ்த்தியவர். சிறையைப் போன்ற பல்லக்கின் மீதேறி இந்த நாட்டில்

பவனிவந்த திருநீற்றுச் சைவர். பாராங் கல்லொக்கும் நெஞ்சத்தார் தம்மைத் தேமாங்

கனியொக்கும் அறிவுரையால் கனியச் செய்தார். முல்லைப்பூ மாலைக்கோ பாராட் டுக்கோ

மூதறிஞர் மயங்கியதே இல்லை கண்டீர்!

இளந்திரையன் என்பானோ பெரும்போர் வீரன்.

இருண்டகடல் நீந்தியவன். வீரங் காட்டி வளர்ந்தபுகழ் பெற்றுயர்ந்த வேந்தன். அந்த

மாவீரன் நம்மவர்நெப் போல்யன் ஆவான். தளர்ந்த செயல் செய்தறியாப் புலியூர் ஞானி தமிழகத்தின் சாலமனே யாவார். நுட்பம் அளந்தமனம் கொண்டவராம் அவர் போற் பேசும்

ஆற்றல்பெற்றார் இன்றிங்கே யாரு மில்லை!