இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக் கவிஞர் சுரதா 123
- * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எண்ணெய்ச் சூரியன்
உவமைக் கவிஞர் சுரதா
பாரிதான் மனித மேகம்;
- பறவைதான் உயிர்வி மானம்;
o மாரிதான் முகிலின் வேர்வை
மெளனந்தான் உதட்டின் போர்வை;
ஏரிதான் வயலின் தாய்ப்பால்;
எரிகின்ற விளக்கே! எண்ணெய்ச்
சூரியன் நீதான்! தீயின்
தொடர்கதைச் சுருக்கம் நீதான்!
- சித்திர விளக்கே! உன்றன்
தேகமோ, கன்னார் செய்த பித்தளைப் பள்ளம்.! உன்றன்
பெருமூச்சே புகையாம்! காதல் நித்திரைக் கேற்ற வெள்ளை
நிலவினில் ஆணும் பெண்ணும் : ஒத்திகை பார்ப்பர், நீயோ
உன்னடி நிழலைப் பார்ப்பாய்!
o எரிகின்றாய் அரும்பு போலே;
- எனினும்நீ எரிவ தற்குத்
- திரிவேண்டும்; எண்ணெய் வேண்டும்; தீக்குச்சி வேண்டும் - பெண்ணின்
வரிவிரல் உதவி வேண்டும்!
- மழைநீரோ, தென்றல் காற்றோ
- ஒருகரம் உன்மேற் பட்டால்
உன்னுயிர் உடனே போகும்.