பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சிறந்த சொற்பொழிவுகள்

ஆதித் திராவிடர்கள்

நேற்று ரீமான் மெய்யப்ப செட்டியார் (ஜெயங் கொண்டபுரம் மெ.ராம.மெ.) அவர்களால், ஆதித் திராவிடர்களுக்காக வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக் கூடத்தையும், மேல் ஜாதியாருக்காக வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக் கூடத்தையும் பார்த்தேன். ஆதித் திராவிட பள்ளிப் பிள்ளைகட்கு வேட்டி வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்னும் வேண்டும் செளகரியங்களைச் செய்து கொடுக்கிறார்கள். எனினும் அங்குக் கொடுக்கப்படும் கல்வி முறையைக் கண்டபொழுது எனக்கு ஒரு சந்தேக முண்டாயிற்று. அதனை இங்கும் தெரிவிக்கிறேன்.

தனவைசியர்கட்குப் பணமுடை யில்லாதிருக்கலாம். அவர்கள் நாற்பதினாயிரம் ஜனங்கள்தான். மற்ற ஜனங்கள் அவ்வாறில்லை. எனவே, அவர்களுக்குத் தொழிற்கல்வி போதிக்க வேண்டும். அத்தொழிலில் வரும் வரும்படியை அவர்கள் பெற்றோர்கட்குக் கொடுத்துவிடலாம். ஆதித் திராவிடர்கள் நன்கு படித்துவிட்டாலும் உத்தியோம் கிடைத்தா லல்லாவா சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்?

படித்தவர்கள் எல்லோருக்கும் உத்தியோகம் கிடைத்து விடுமா? ஒவ்வொரு கலாசாலையிலும், குருகுலம் போல தோட்டம், நன்செய், புன்செய் முதலியன ஏற்படுத்தித் தொழிற்கல்வி போதிக்க வேண்டும்.

ஆதித் திராவிட மாணவர்கட்குப் பன்னிரண்டு மணிவரை விவசாயமும், அதற்குமேல் பாஷா ஞானமும் போதிப்பது மேன்மை தரும். பணமில்லாமல் ஒருவனும் ஒரு வேலையும் செய்ய முடியாது. தரித்திரனாக ஒருவன் இருப்பானாயின் அவன் அறிவு திறம்பட வேலை செய்வதில்லை. அரசாங்கத்தாரால் அனைவருக்கும் உத்தியோம் கொடுக்க முடியுமா என்பதுபற்றி நான் ஒன்றும் கூற முடியாது.

அரசியல் விஷயங்களைக் குறித்து நான் ஒன்றும் இப்பொழுது அதிகமாய்ப் பேசுவதில்லை. சாரமாகச் சொல்வதுண்டு. அரசியலைப் பற்றிப் பேச நண்பர்களான திரு ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி அவர்களே தகுதியுடையவர்கள். ஏனென்றால், சில சமயங்களில் பொய் பேச நேரலாம். புகழும்படி நேரலாம். எனவே நான் அதற்குச் சிறிதும் அருகனல்ல. நான் பேசினேனானால் ஸ்பிரிட் உண்டாகிவிடும். உடனே என் மனதில் உள்ளன. வெல்லாம் வெளியில் வந்துவிடும்.

உடனே இன்னும் நான்கு வருஷ மோ, நாற்பது வருஷ மோ ஜெயிலுக்குப் போகவேண்டுவதுதான். பின்னர் என் பெண்டாட்டி, பிள்ளைகளெல்லாம் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியதுதான்.