பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. நாயனார் 75

நிறைவேறியது. தீர்மானம் காகித அளவோடு நின்றதே யன்றிச் செய்கையில் கொண்டு வராததைப் பற்றி வருந்துகிறேன்.

நம் சமூகத்தின் சரித்திரங்களையும், நாம் அடைந்திருக்கும் நிலைமையையும், நமது குலம் முன்னேற்ற மடைவதற்கு வேண்டிய விஷயங்களையும் விளக்கி நம் சமூகத்திற்குள் நல்லுணர்ச்சியும் ஊக்கமும் ஒற்றுமையும் ஏற்பட ஒரு பத்திரிகை மிகவும் அவசிய மென்பதை இந்த மகாநாட்டிலும் வற்புறுத்திக் கூறுகிறேன்.

இறுவாய்

அன்பர்களே! இத்துடன் என் உரையை முடித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் என்னை அன்புடன் ஏற்று என் உபந்நியாசத்தை அமைதியோடு கேட்டிருந்ததற்கு என் வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- திராவிடன் (11-8-1929)

(சாலியர் மஹாஜன சங்கம் நாகர்கோவில் முனிசிபல் பிரசிடெண்ட் திருவாளர் ஏ.நாயனார் பி.ஏ.,பி.எல்., தலைவர். அருப்புக்கோட்டையில் சாலியர் முதல் மாநாடு 29.4.1928இல் நடைபெற்றது.) - (திராவிடன்)