பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேஜை மீது வைக்கப்பட்ட காப்பி

ஆறிக் கொண்டிருந்தது. ஜக்கு என்றும் அப்படி இருந்ததில்லை. உற்சாகமாக "அம்மா' என்று சு அழைத்தவாறு அலுவலகத்திலிருந்து திரும்பி வருவான். களேப்பு, சோர்வு, சிடுவிடுப்பு எதுவுமே அவனிடம் அவள் கண்டதில்லை. வாடா மலர் போல் என்றும் பிரசன்னமாக அவன் இருப்பதையே நாராயணி பெரி தும் விரும்பினுள். அப்படியே அவனே எந்தக் கஷ்டமும் தெரியாமல் ஆளாக்கி யிருக்கிருள். இன்று ஏன் அவன் முகம் வாடி வதங்கி இருக்கிருன் தயங்கிய வாறு அருகில் வந்து நின்ருள் நாரா யணி. மெதுவாக மகனின் தலையை வருடிக் கொண்டே, 'ஏண்டா, அப்பா!

ஏன் ஒரு மாதிரிய 円茜 இருக்கிருய்?' என்று கேட்டாள்.

ஹாம். . . .'" என்ருன் ஜக்கு. "ஒரு

மாதிரியுமில்லை, ஒன்றுமில்லை...' அலுப் புடன் வார்த்தைகள் வந்தன.

இப்பொழுது நாராயணி அலுத்துக் கொண்ட*ள். "எண்டாப்பா! உன்னைப் பெற்று வளர்த்து எல்லாப் பொறுப்புக் களையும் நானே சுமந்து ஆளாக்கி விட் டேனே! இனிமேல் நீ அலுத்துக் கொள் எாத்தான்் செய்வாப். . . .'" அவளும் கன்னத்தில் கையை ஊன்றியபடி கத வோரமாக மகனுக்கு எதிரில் வந்து உட் கார்ந்தாள். ஜக் து தாயின் கவலே தேங் கிய முகத்தைப் பார்த்தான்். பார்த்த

வுடன் அவனுக்கு இரக்கம் மேலிட்டது.

"இதோ, பார், அம்மா! இத்தனை காலம் நீ என்னே அதட்டி உருட்டி

வளர்த்து விட்டாய் படிக்க வைத்தாய். எப்படியோ வேலேயும் கிடைத்து விட் டது. இத்துடன் நீ என்னே விட்டிருக்க வேண்டும். அதுதான்் இல்லை. நான் கவியானம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று வேறு ஆசைப்படஆரம்பித்துவிட்டாய்.' ஜக்குவின் குரல் வேதனையுடன் ஒலிப் பதை நாராயணியால் தாங்க முடிய வில்ஃ. -

'ஜக்கு ன் ஆசைப்பட்டது தவ ருடா? . . . .தவரு? இல்லை. உன்னத்தான்் கேட்கிறேன். காலமெல்லாம் உனக் காகவே வாழ்ந்த நா ன், ஆசைகளே யெல்லாம் அடியோடு குழி வெட்டிப் புதைத்தன ளாக வாழ்ந்த நா ன் இப்படி ஆசைப்படக்கூடாது என்கிருயா?' பதற் றத்துடன் தாயின் சொற்கள் சூடாகவே வெளி வந்தன. ஜக்கு பதறி விட்டான். வேகமாக நாற்காலியிலிருந்து எழுந்த வன் அன்னேயின் அருகில் வந்து அவளு டைய எலும்புக் கரங்களேச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு. 'அம்மா! என் பேரில் கோபித்துக் கொள்ளாதே. இது நாள் இ T உன் வார்த்தையை

எதிர்த்தோ, மீறியோ நட ந்திருக்கிறேனு:

என்னே - ஏன் நம்மைச் சூழ்ந்துள்ள இந்த அவப்பெயர் இருக்கும் வரை எனக்கு யாரம்மா பெண் கொடுப் பார்கள்?" என்று கேட்டு விட்டுக்

கண்ணிர் பெருக்கினுன் அவன்.

நாராயணி கல்லாகச் சமைந்து விட்டாள். மகனின் கேள்விக்குப் பதில் கூருமல் மலைத்து உட்கார்ந்து விட்டாள். கால வெள்ளத்தோடு எதிர்நீச்சு போட்டுக் கரையேறிவிட்டோம் என்கிற எண்ணமும் அந்த வினுடியே உடைந்து சிதறியது. பெண்ணைப் பெற்றவர்கள் வரதட்சினே கேட்டால் கொடுத்துவிடுவார்கள். சீர் சிறப்புக்கள் வேண்டு மென்றால் சிறப்புடன் செய்வார்கள். ஆனால்

H

பிள்ளைக்குத் தகப்பனுர் கல்லேப் போல் எங்கோ இருக்கிருர் என்று கூறினுள் ஏன் என்ன என்று கேட்க மாட்டார்களா? வாழாவெட்டி வளர்த்த பிள்ளே என்று ஒரு தினுசாகத்தான்ே அவர்கள் பார்க்கிரு.ர்கள் ?

நாராயணி தன் கணவனே விட்டுப் பிரிந்தபோது நிமிர்ந்த உள்ளத்துடன் நான்கு வயதுப் பையனின் கையை உறுதியாகப் பற்றியபடி அவளுக்கு உரித்