பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக இருந்த கணவன் வீட்டுப் படிகளில் இறங்கித் தெருவில் நடந்தாள். உலகம் ப்ர்ந்து கிடக்கிறது. நேர்மையாக, மானத் துட்ன் வாழ இந்தப் பரந்த உலகம் இடம் கொடாமல் போய் விடப் போகிறதா என்றுதான்் அன்று நினைத்தாள். அவன் அவன் விட்டுப் பிரிய பல காரணங்கள் இருந் தன. திருமணங்கள் சுவர்க்கத்தில் நிகழ்த் தப்படுகின்றன. நம் செயலில் இல்வே" என்கிற வாக்கை அப்படியே ஒத்துக்கொள்ள ஜக்குவின் தந்தை தயாராக இல்லை. திரு மனம் பூமியில்தான்் நிகழ்த்தப்படுகிறது. அதில் இப்படித் தோல்வியுறும் திருமணங்கள் பெரும்பாலும் பணத்தை முதலாக வைத்து ஆடப்படும் சூதாட்டம் போன்றது என்று அவன் கருதிஞன். மனைவி அழகியல்ல என் பது மட்டும் அவன் வாதமல்லா குணப் பொருத்தமும் அமையாதவள் என்கிற முடி வுக்கும் வந்து விட்டான். நாராயணியின் திண்மையான மனம் கணவனின் போக்குக்கு நெகிழ்ந்து கொடுக்க வில்லை.

அவன் கிழக்கு என்றால் இவள் மேற்கு என்பாள். இந்த லட்சனத்தில் மகன் பிறந் ததை அவன் மகிழ்ந்து வரவேற்கவில்லை. இந்த அழகான மனைவியிடம் குழந்தை பிறக்க வேண்டும் என்று தவமா கிடந்தான்்? உலகத் தில் எத்தேையா வேண்டாத உயிர்கள் தோன்றுவது போல் ஜக்குவும் பிறந்தான்். குழந்தை பிறந்தால் கணவன் மனைவியின் உறவு பலமடைந்து விடும் என்று மற்றவர்கள் சொன் தைப் பொப்ப ாக்குவது போ ல்,அவன் ஒரு வது தன் குழந்தை, தன் உயிரின் 1 யிர் அது என்று எட்டிக்கூடப் பார்க்கவில்லை. மகனுடன் தன்னை வெறுத்து ஒதுக்கியதால் நாராயணியின் திண்மை இன்னும் வலுப் பெற்றது. ஜக்குவுக்கு நான்கு வயதாகும் போது அவள் அவனிடமிருந்து வெளிஉலகில் குதித்து விட்டாள்: எப்படியோ காலம் தள்ள முடியாமலா போய் விடும் என்கிற நம்பிக்கையில், ==

இரு து வருஷங்கள் ஆகி விட்டன. ஜக்கு அவன் தந்தையைப் போலவே நல்ல உயரம். அதற்கேற்ற பருமன். முக்கு, விழிகள். பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்பாவை உரித்து வைத்திருந்தன. மகனைப் பார்க்கும்போதெல் லாம் நாராயணிக்கு ஒரு நிறை ஏற்பட்டது. அவரை அந்தக் காலத்தில் முதன் முதலாகப் பார்த்த நினைவு பளிச்சிடப் பெருமையோடு மகனைப் பார்த்துக் கொண்டே யிருப்பாள்.

என்னம்மா அப்படிப் பார்க்கிருப் ?" என்று ஜக்கு கேட்டான்.

""ஒன்றுமில்லேயடா! ஞாபகம்...'

"என்ன ஞாபகம் அந்த மனிதனைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பாய்....'

'ஜக்கு! என்ன பேசுகிருய் அந்த மனிதன் என்ரு அவரை அழைப்பது? அவர் உன்னைப் பெற்ற தகப்பணுர்டா.... அப்படிச் சொல்லாதே அப்பா-

'"ஹாம்.... மகா தகப்பன்-' என்று கூறிவிட்டு வெளியே போய் விடுவான் அவன். நாராயணி தனக்குள்ளாகவே பேசிக் கொண்டாள். 'ஐந்து வயசிலேயே அவன் தகப்பனிடம் கன் குரோதத்தைக் காட்டி

என்னவோ பழைய

விட்டான். 'அந்த மனிதன்" என்று அவன் இன்றுதான்ு புதிதாகச் சொல்கிருன் எப் பொழுதும்ே அப்படித்தான்் பேசுகிருன் இனி தகப்பனுக்கும், மகனுக்கும் ஒட்டு உறவு ஏற். படுமோ ஏற்படாதோ?”

நாராயண்ணி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஜக்குவின் தகப்பனுர் மலே போலத் தம் தாயை நம்பி வாழ்ந்தார். அவர் சம் பாதித்துக் கொடுக்க. அன்னை சமைத்துப் போட இப்படிக் காலம் ஒடிக் கொண்டிருந் தது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் அவர் தாம் கடமை தவருமல் வாழ்பவர் என் றும், தம்மைப் பெற்றவர்களிடத்தும். உடன் பிறந்தவர்களிடத்தும் மாருத அன்பு கொண் டிருப்பவர் என்றும் அத்துடன் தம் கடமை முடிந்து விட்டதாகவும் நினைத்து அடியோடு நாராயணியை மறந்து விட்டார். சின்னஞ் சிறு பையனுக வெளியேறிய ஜக்குவைப் பற்றி அவர் மனத்தில் எதுவும் இல்லை. மனைவிக்கு மாதா மாதம் சிறு தொகை ஒன்று அனுப்பி விட்டுத் தம் கடமையைக் கைகழுவி விட்டார் என்று சொல்லலாம்.

முதலில் அந்தப் பணத்தை தாராயணி ஏற்றுக் கொள்ளத் தயங்கிளுள். ஆனல், மகனை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப் பில் தாயாருக்கு மட்டும் பங்கு இல்லே, தந்தைக்கும் உண்டு என்பதை உணர்ந்த வுடன் அந்தப் பொறுப்பு இந்தப் பண உதவி யாகத்தான்் ருக்கட்டுமே என்று அதை அவள் மறுத்து விடவில்ஃப்.

உலகில் கணவனும், மனவியும் ஏதோ காரணங்களிளுல் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ்கிருர்கள். இவர்கள் பிரியும் போது நாராயணி வாயிற்படி இறங்குமுன்பு சற்றுக் கடுமையாகப் பேசிள்ை.

"என்றைக்காவது என் தயவு உங்களுக்குத் தேவைப்படும். அப்படித் தேவைப்பட்டால் சான்னோக் கூப்பிடுங்கள்... வருகிறேன். ஆமாம்....கண்டிப்பாக வருகிறேன்.'

அவள் கணவர் அவளைக் கொடூரமாகப் பார்த்தார். 'உன் தயவு என்றைக்குமே எனக்குத் தேவை இல்லை. உன்னே நாடி நான் என்றும் வரமாட்டேன். போ. வெளியே'

பிறகுதான்் நாராயணி எப்படி யோ உலகில் துன்பங்கள், ஏச்சுக்களுடன் போராடித் தான்ும் உயிர் வாழ்ந்து. மகனையும் ஆளாக்கி விட்டுவிட்டாளே. இன்று மகனின் திருமணம் அவள் முன் மகத்தான்தாக நிற்கிறது. யார் பெண் கொடுக்க வந்தாலும், நாராயணியின் மஞ்சள் பூசித் திலகமிட்ட முகத்தை விளுக் குறியுடன் பார்க்கிருர்கள். கழுத்திலே மஞ்சள் குளித்துத் துவளும் திருமாங்கல்யச் சாட் டைப் பார்க்கிருர்கள். அடுத்த கேள்வி ஜக்கு வின் தந்தை எங்கே என்பதுதான்ே? அவன் என்னவோ ஒரே வார்த்தையில், "அம்மா! எனக்காக நீ உன் பழைய வாழ்க்கையை நினைவுபடுத்திக் கொள்ளாதே. அதை அடி யோடு மறக்க முயற்சி செய்' என்றுதான்் சொல்லி வருகிருன். ஆனுல், பெற்ற தாயின் உள்ளம் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. இதற்கிடையில், கணவனைப் பற்றி மனேவி யின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த நினைவு அடி யோடு போய் விட்டதா என்றால் அதுதான்் இல்லை. மகனிடம் சொல்லிக் கொள்ள முடி யாத பரம இரகசியமாக அந்த நினைவு அவள்