பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

இன்றைய இளைய தலைமுறையின் வலுவான மன வளர்சசியே நாளைய நாட்டின் வலுவான சக்தி.

இளம் உள்ளங்களில் நாட்டுப் பற்று கடமை உணர்வு ஆகியவற்றை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் தேசீய உணர்வு மிக்கவர்களாக விளங்க முடியும். தேசீய ஒருமைப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழ முனைவார்கள்.

சுதந்திரத்தின் உண்மைப் பொருளை இளம் வயதிலேயே உணர்த்த வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் தாங்கள் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதோடு மற்றவர்களின் சுதந்திரத்தையும் மதித்து நடப்பார்கள் இதனால் நாட்டு நலன் மட்டும் அல்லாது சர்வதேச நலனே பாதுகாக்கப்படும். இந்த உண்மையை இளம் உள்ளங்கள் ஏற்கும் வண்ணம் எழுதப்பட்டதே இந்நூல்.

அனைத்திந்திய வானொலி சென்னை நிலைய சிறுவர் நிகழச்சியில் ஒலிபரப்பபபடடதே இன்று நூலுருப் பெற்றுள்ளது.

எனது பிற நூல்களை ஏற்றது போன்றே இந்நூலையும் வாசகர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

அன்பர்

மணவை முஸ்தபா

ஆசிரியர்