பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கீழே செல்ல ஒரே நேரத்தை எடுத் துக் கொண்டதைக் கண்டறிந்தார். விழும்போது எல்லாப் பொருட்களும் ஒரே மாதிரி நேரத்தையே எடுத்துக் கொள்ளும் என்பதை நிறுவிக் காட்டி 6UTП Т. - வானவியல் ஆராய்ச்சியில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றிய பல உண்மைகளைக் கண் டறிந்தார். சூரியனில் கரும்புள்ளிகள் காணப்படுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்துக் கூறினார். சந்திர னில் மலைகள் உண்டு என்றும் கண் டறிந்து கூறினார். இவருக்குமுன் வாழ்ந்த கோப்பர் நிக்கஸ் எனும் வானவியல் அறிஞர் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று கண்டறிந்து கூறியிருந்தார். ஆனால், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று அழுத்தமாக நம்பியிருந்த மக்கள் இதை ஏற்கவில் லை. ஆயினும் காலிலியோ ஆராய்ச்சி செய்து, சூரியன் பூமியைச் சுற்ற வில்லை, மாறாக பூமிதான் சூரிய னைச் சுற்றுகிறது என்பதைக் கண் டறிந்து கூறினார். இதை நிரூபிக்க கட்டுரைகளும் நூல்களும் எழுதித் தன் கருத்தைப் பரப்பினார். தங்கள் சமயக் கருத்துக்கு மாறாக இருக்கும் காலிலியோவின் ஆராய்ச்சி உண்மை கண்டு சமயத் தலைவர் கள் வெகுண்டு எழுந்தனர். காலிலி யோவைக் கடுமையாகக் கண்டித் தனர். அவரை அவரது வீட்டி லேயே சிறை வைத்து, தன் கருத் துக்களைப் பரப்பவிடாது தடுத்தனர். சிறையிருந்த காலிலியோ தன் பார்வையை இழந்து 1641இல் கால மானார். இன்றைய வானவியல் ஆராய்ச்சிக்கு வழிவகுத்த இவரை கிரிக்கெட் ‘அறிவியல் தந்தை என விஞ்ஞான உலகம் போற்றுகிறது. கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற விளையாட்டுகளில் கிரிக்கெட் விளை யாட்டும் ஒன்று. இது ஒருவகைப் பந்தாட்டம் ஆகும். இவ்விளையாட்டு இங்கிலாந்து நாட்டில் தோன்றியது. இது அந்நாட்டின் தேசிய விளை யாட்டும் ஆகும். கிரிக்கெட் மைதானம் சமதளமாக வும் நீள் வட்டமாகவும் உள்ள புல் தரையாக அமைந்திருக்கும். மைதா னத்தின் நடுவிடத்தில் முக்கால் மீட் டர் உயரமுள்ள மூன்று கழிகள் நடப் பட்டிருக்கும்.அக்கழிகளிலிருந்து நேர் எதிராக 20 மீட்டர் தூரத்தில் அதே போன்று மூன்று கழிகள் நடப்பட்டு இருக்கும். இக்கழிகளின் மீது 20 செ. மீ. நீளமுள்ள இரண்டு குறுக்குக் குச்சிகள் வைக்கப்பட்டிருக்கும். கிரிக் கெட் பந்து கார்க்கால் செய்யப்பட்டு தோலால் மூடித் தைக்கப்பட்டிருக்கும். பந்தை அடிக்க மட்டை பயன்படுத் தப்படும். இதன் நீளம் சுமார் 1 மீட் டர் இருக்கும். கிரிக்கெட் விளையாடுபவர்கள் இரு அணியினராகப் பிரிந்து நிற்பர். ஒவ் வொரு அணியிலும் 11 பேர் இருப்பார் கள். பந்தடிக்கும் கட்சியைச் சேர்ந்த இருவர் விக்கெட்டுக்கு ஒருவராக அதன் முன் நின்றுகொள்வர். இவர் கள் பேட்ஸ்மன் (பந்தடிப்போர்) எனப்படுவர். இக்கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் பந்தாட்ட மைதானத் திற்கு வெளியே இருப்பர். பந்து எரி யும் கட்சியினர் இருவர் பந்தெறிவர். வேறொருவர் விக்கெட்டுக்குப் பின் புறம் நிற்பார். இவர் விக்கெட்காரர் (wicket keeper) என அழைக்கப்படு வர். மற்றவர்கள் எறியும் பந்தைப் பிடிக்கவோ, தடுக்கவோ ஏற்றாற்