பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 உலகத்து நாகரிகங்களிலேயே மிகப்பழமையான நாகரிகமும் பண் பாடும் கொண்ட நாடுகளில் இந்தியா ஒன்றாகும். ஹரப்பா, மொஹஞ்சதா ரோ போன்ற இடங்களில் அகழ்ந் தெடுக்கப்பட்ட பழம் பொருட்கள் இந் திய நாகரிகச்சிறப்பை எடுத்துக்காட்டு கின்றன. இது திராவிட நாகரிகம் ஆகும். அதன் பின் வளர்ந்தது ஆரிய நாகரிகம். இவ்விரண்டு நாகரிகங் சளும் இன்றும் இந்திய மக்கள் வாழ் வில் இழையோடிக்கொண்டுள்ளன. பண்டு தொட்டே இந்தியாவில் கவின் கலைகளான இசை, ஓவியம், சிற்பம், நடனம், கட்டிடக்கலை போன்றவை திறம்பட வளர்ந்து வந் துள்ளன. வட இந்தியாவின் இந்துஸ் தானி இசையும் தென் இந்தியாவின் கர்நாடக இசையும் புகழ்பெற்றவை களாகும். இந்திய இலக்கியங்களில் பல இசை இலக்கியங்களாகும். தமிழ் மொழியில் உள்ள தேவாரம், திரு வாசகம், திவ்யபிரபந்த நூல்கள் சிறந்த இசை நூல்களாகும். , இந்திய நடனங்களில் பரத நாட்டி யம், கதக், குச்சிப்புடி மணிப்புரி, கத களி முதலிய புகழ்பெற்ற நாட்டிய வகைகள் ஆகும். இந்தியக் கோயில் களில் பலவும் சிற்பக்கலைவளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. தமிழ கத்தில் உள்ள மாமல்லபுரம், கழுகு மலை, சித்தன்னவாசல், வட இந் தியாவில் உள்ள அஜந்தா,எல்லோரா, எலிபெண்டா போன்ற இடங்களில் காணும் குகைக் கோயில்கள் சிற்பக் கலை வளர்ச்சியின் சிறப்பை எடுத் துக்கூறுகின்றன. இவை செதுக்கப் பட்டு பல நூறு ஆண்டுகளாகியும் இவை இன்றும் அழகு குன்றாமல் விளங்குகின்றன. அதே போன்று மத்திய காலத்தில் மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இந்தோனேசியா ஆக்ரா கோட்டை, பதேப்பூர் சிக்ரி அக்பர் அரண்மனை போன்றவைகள் இந்தியக் கட்டிடக்கலைச் சிறப்புக்கு ஏற்ற சான்றுகளாகும். இந்தியாவில் பழங்காலம் முதலே பெளத்த சமண இந்துசமயங்கள் இருந்து வருகின்றன. இடைக்காலத் தில் இஸ்லாம் பரவியது. பின்பு குரு நானக் மூலம் சீக்கிய சமயம் உருவா கியது. ஆங்கிலேயர்கள் மூலம் கிருத் துவ சமயம் இந்தியாவில் பர்ப்பப்பட் டது. இந்திய இலக்கியங்களில் பெரும்பாலானவை சமய இலக்கியங் களாகும். சமயத்துறையில் வளமாக விளங்கு வது போன்று இந்திய அறிவியல் வளர்ச்சித் துறையில் அண்மைக்கால மாகப் பெரும் வளர்ச்சியடைந்து வரு கிறது. சர். சி. வி. இராமன் பெளதிக ஆராய்ச்சிக்காக உலகப் பரிசான நோபல்பரிசு பெற்றார். மனிதர்களைப் போன்றே செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்று கண்டறிந்து கூறினார் ஜகதீச சந்திரபோஸ். அணு விஞ்ஞானத்துறையில் புகழ் பெற்ற விஞ்ஞானியாக விளங்கியவர் ஹோமிபாபா என்பவர் ஆவார். வான வி ய ல் ஆராய்ச்சித்துறை யில் இந்தியா சிறந்து விளங்கி வரு கிறது. கேரளத்தில் தும்பா, ஆந்திரா வில் ரீஹரிகோட்டா போன்ற இடங் களிலிருந்து விண்கோள்கள் வெற்றி கரமாகச் செ லு த் த ப் பட் டன. தொடர்ந்து அறிவியல் துறையில் முனைப்பாக வளர்ந்து வருகிறது இந்தியா. இந்தோனேசியா: இது 3000 தீவு களைக் கொண்ட நாடு ஆகும். இவற் றுள் ஜாவா, சுமத்திரா, போர்னியோ, பாலி, செலிபிஸ், மொலக்கஸ் முதலி யன பெரிய தீவுகளாகும். இந்நாட்