பக்கம்:சிலம்பின் கதை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

சிலம்பின் கதை



பேய்கள் கூத்து ஆடி மகிழ்ந்தன. இவன் வெற்றிப் புகழைப் பாடிச் சிறப்பித்தன. மறக்கள வேள்வி முடித்த வேந்தன் அங்கு “வேள்விகள் ஒம்பிய மறையவர்க்குத் தக்க வகையில் உதவி அவர்களுக்குச் சிறப்புச் செய்க” என்று ஆட்களை அனுப்பினான். அதன்பின் வில்லவன் கோதை என்னும் அமைச்சனோடு வீரர்களை அனுப்பி இமயத்து உச்சியினின்று பத்தினிக் கடவுளுக்குக் கல்லைக் கொண்டுவரச் செய்தான்.


27. கங்கையில் நீராட்டுதல்
(நீர்ப்படைக் காதை)

வட பேர் இமயத்தில் கடவுள் பத்தினிக்குக் கல்லைக் கொண்டு வந்த பின்பு கனக விசயர்தம் கதிர்முடிமேல் ஏற்றிக் கொண்டு வந்தான். தென் தமிழ் ஆற்றல் அறியாது வந்து மலைந்த ஆரிய மன்னரையும், அவனுடன் வந்த படை வீரர்களையும் கொன்று குவித்தான். இந்த வெற்றிச் செய்தி எட்டுத் திசையும் பேசப்பட்டது.

இதற்கு முற்பட்ட போர்கள் யாண்டுகளில் நடந்தன; மாதங்களில் நிகழ்ந்தன; நாட்களில் நடைபெற்றன; அவற்றிற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட காலம் ஒவ் வொன்றுக்கும் பதினெட்டு எனக் கூறப்பட்டது. ஆண்டு களிலும், மாதங்களிலும், நாட்களிலும் நிகழ்ந்த போர்கள் அவற்றை நோக்க இது நாழிகைகளில் முடிவு பெற்றது. பதினெட்டே நாழிகையில் இப்போர் தொடங்கி முடிவும் பெற்றது. சாதனைகளில் இது மற்றவற்றை விட விஞ்சி விட்ட செய்தி, வரலாற்று நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றது. ஒரே பகலில் முடித்த போர் இது என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட செய்தி இது.

செங்குட்டுவன் தன் மாபெருஞ் சேனையுடன் கங்கைப் பேர் யாற்றுக் கரையை அடைந்தான். பத்தினிக் கடவுளுக்கு வேதியர்களைக் கொண்டு நீர்ப் படுத்தித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/159&oldid=936479" இலிருந்து மீள்விக்கப்பட்டது