பக்கம்:சிலம்புநெறி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 103

கோவலன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனு டைய செல்வத்திற்கேற்ப, அவன் வள்ளமையுடையவனா கவும் புகழுடையவனாகவும் விளங்காது போனால் மாதவி யின் கூட்டினால்தான்் இந்தத் தவறுகள் வந்தன, கோவலன் வள்ளன்மை இழந்தான்், புகழை இழந்தான்், என்று ஊரவர் பேசாதிருக்க, கோவலன் விரும்பியவா றெல்லாம் அறம் செய்து ஒழுக மாதவி துணை நின்றாள்.

மாதவியிடத்தில் கோவலன் வாழ்ந்த காலத்தில் வீரச் செயல்களைச் செய்திருக்கின்றான்; அறச் செயல்களைச் செய்திருக்கின்றான்.

கோவலனும் மாதவியும் பூம்புகாரில் தங்கள் அருமை மகள் மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா எடுத்தனர். விழாவில் கோவலனிடம் தான்ம் பெறுவதற்காக ஒரு பார்ப்பனன் வந்தான்் சோழப் பேரரசின் பட்டத்து யானை மதம் பிடித்து, பாகனின் கட்டுக்காவலை மீறி ஓடி வந்தது.

இடையில் சிக்கிய முதிய பார்ப்பனை, யானை தன் தும்பிக்கையில் எடுத்துவிட்டது. கோவலன் பார்த்து விட்டான். விரைந்து யானையின் தும்பிக்கையில் பாய்ந்து அந்த முதிய பார்ப்பனனை விடுதலை செய்தான்். யானை யின் கொட்டத்தை அடக்கி அதன்மீது ஏறி அமர்ந்து செலுத்தினான்.

ஒன்றைக் காப்பாற்றும் பொழுது பிறிதொன்றுக்கு இழப்பு வந்தால் அது வீரமன்று, அறமுமன்று. இங்கு முதிய பார்ப்பனனும் உயிர் பிழைதத்ான். யானைக்கும் யாதொரு கேடுமில்லை. கோவலனும் யாதொரு இடை யூறுமின்றி யானையை வெற்றி வீரனாகச் செலுத் தினான்.

இதனை இளங்கோவடிகள், கடக்களிறு அடக்கிய சருணை மறவ!' என்று மாடலன் வாயிலாக வாழ்த்து

கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/105&oldid=702768" இலிருந்து மீள்விக்கப்பட்டது