பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

131


பகல் முடிந்து இரவை நோக்கிப் பொழுது போகும் வேளையில், பெண்கள், நெல்லோடு முல்லை மலரைக் கலந்து வீடெல்லாம் தூவி, விளக்கு ஏற்றி இறை வணக்கம் செய்வர். பின்னர் இரவுக்கு ஏற்ற உடை (Night Dress) உடுப்பர். பாடல்:

"அகல் நகரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்கோர்
கோலம் கொடி யிடையார் தாம்கொள்ள"
(9:1-4)

என்பது பாடல் பகுதி. நகர் = வீடு, நிகர் = ஒளி. நக்கீரர் நெடுநல்வாடையிலும் இந்த மரபைக் கூறியுள்ளார்:

"நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவண மாலை அயர"
(43, 44)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்திலும் ஏழைகள் தவிர்த்த மற்ற பெண்டிருள் சிலர் இரவு ஆடை உடுத்து இன்றனர். பெண்டிர் சிலர் பகலிலும், கத்தோலிக்கக் கிறித்துவத் துறவியரின் உடைபோன்ற "நெடு அங்கி" உடுத்திப் பெண்மையின் பொலிவைக் குறைத்துக் கொள்கின்றனர்.

கணவனால் கைவிடப் பட்டவர்கள், அறுகம்புல், சிறுபூளைப் பூ, நெல் ஆகியவற்றைக் கலந்து தூவி இறை வழிபாடு செய்யின், கணவனை மீண்டும் பெறலாம் என்று தேவந்தி கண்ணகிக்காகச் செய்து கணவனைப் பெறுக என்று வrழ்த்தினாளாம்.

"கண்ணகி கல்லாளுக்கு உற்றகுறை உண்டென்று
எண்ணிய நெஞ்சத்து இளையளாய் கண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச்சென்று
பெறுக கணவ னோடு என்றாள்"
(9:41-44)