பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

161


நடந்தது நின் கணவன் செங்கோல் வளையாமையாலே யாம். (25)

சோலையில் மயில் ஆடவும் குயில் பாடவும் மாலை அசையவும் நடந்தாய் காவேரி, நீ இவ்வாறு நடந்தது நின் கணவனது வேலின் கொற்றத்தினாலேயாம். (26)

அவன் நாட்டை மகவாய் எண்ணி வளர்க்கும் தாயாக நீ உள்ளாய். ஊழிக்காலம் வரையும் இந்த உதவியை நீக்க மாட்டாய். இது அவன் அருளாலேயே வாழி காவேரி (27) இந்த மூன்றுக்கு மட்டும் உரிய பாடல்களைப் பார்க்கலாம். இவை மிகவும் புகழ்பெற்ற சுவைப் பாடல் களாகும்:-

ஆற்றுவரி

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடைஅது போர்த்துக்
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்த வெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி (25)

"பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறங்கண்டே

அறிந்தேன் வாழி காவேரி" (26)