பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

சுந்தர சண்முகனார்


பின்தோன்றல்கட்கும் பெரும் பழி இதனால் ஏற்படுமாம். கண்ணிருக்கு அவ்வளவு ஆற்றல் உண்டு.

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொடு ஒக்கும்"

இவ்வாறு சுவையான சிறப்புச் செய்திகள் பல சிலம்பில் உள. இன்னும் ஒன்று:

இரு பெருங் குரவைகள்

சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் இரு பெருங் குரவைக் கூத்துப் பகுதிகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவையைத் திருமாலைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும், குன்றக் குரவையை முருகனைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும் கூறும் அளவுக்கு, இரண்டும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்னும் முறையில் சிறந்து திகழ்கின்றன. சுவையான இந்தப் பகுதிகளை எழுத ஆசிரியர் இளங்கோ அடிகள் எங்கே யாரிடம் கற்றாரோ என வியக்கத் தோன்றுகிறது. இனி முறையே அவை வருமாறு:

1. ஆய்ச்சியர் குரவை
ஏழுகள்

தாம் வாழும் பகுதியில் தீய நிமித்தங்கள் பல தோன்றியதால், மாதரி, தன் மகள் ஐயையிடம், குரவைக் கூத்து ஆடினால் தீமைகள் வாரா எனக் கூறிக் குரவைக் கூத்தாட ஏற்பாடு செய்தாள். மேலும் சில கூறுவாள்:

கன்னியர் எழுவர் தலைக்கு ஒரு காளையாக 6 ( காளைகளைத் தொழுவத்தில் கட்டி வளர்த்து வந்தனர். இந்த இந்தக் காளையை அடக்குபவனுக்கு இந்த இந்தக் கன்னி உரியவள் என மாதரி கூறலானாள்:

1. தேனார்ந்த மலர் மாலை அணிந்த இந்தக் கன்னி, இதோ இருக்கும் கரிய காளையின் சீற்றத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து அதை அடக்குபவனை விரும்புகிறாள்.