பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

413



தள்ளும் கருத்து

சிலர் இந்த நிகழ்ச்சியை இன்னும் வேறு விதமாகக் கூறுகின்றனர். அதாவது:- பாண்டியன் மனைவியின் ஊடல் தீர்க்கச் சென்றது மாலை நேரம் - அல்லது முன்னிரவு. அப்போது பொற்கொல்லன் கோள்மூட்டிக் கோவலனைக் கொலை செய்வித்தான். அப்போது பாண்டியன் தன் மனைவி அரசியுடன் படுக்கைக் கட்டிலில் அமர்ந்திருந்தான். அங்கே வந்து கண்ணகி முறையிட்டாள். அப்போதே - அங்கேயே அரசனும் அரசியும் மயங்கி ஒருவர் பின் ஒருவராக உயிர் நீத்தனர் - என்பது சிலரது கருத்து. இவர்கள் தம் கொள்கைக்கு அரணாக, (அரசன்)

“அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்”

(20:22)

என்னும் அடியிலுள்ள ‘அமளி’ என்னும் சொல்லைக் காட்டுகின்றனர். அமளி என்றால் படுக்கைக் கட்டிலாம். அதனால்தான் இவ்வாறு கூறுகிறார்களாம். ஆனால், இவர்கள் “அரிமான் ஏந்திய” என்ற தொடரையும் கவனிக்க வேண்டும். சிங்கம் சுமந்த கட்டில் என்றால், அது அரியணை (சிம்மாசனம்) தானே! எனவே, இது கொள்ளும் கருத்தன்று - தள்ளும் கருத்தாகும்.

இதுகாறும் கூறியவற்றால் அறியவேண்டுவன:- சிலம்பில் காலமுரண் என்னும் வழு இருப்பதாகச் சீராமுலு ரெட்டியார் கூறியிருப்பது தவறு - இதை ஒட்டி, சகந்நாத ராசா “சிலம்பில் சிறு பிழை” என்றநூல் எழுதியிருப்பது தேவையற்றது - காலமுரண்வழு இல்லை என்று வாதிடும் வீரபத்திரன், அதை நிறுவக் கையாண்டுள்ள முறை - செய்துள்ள ஆய்வு - பொருத்தமானதன்று - என்பனவாம்.

இருப்பினும், ‘பிழையிலாச் சிலம்பு’ என்னும் நூலை எழுதியதின் வாயிலாகச் சிலப்பதிகாரத்தின் சிறப்பையும்