பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 சுந்தர சண்முகனார் 3. வழக்குரை காதை

பாண்டியன் மனைவியாகிய கோப்பெருந்தேவி, கோவலன் கொலையுண்ட முதல்நாள் இரவு தான் கண்ட தீய கனவை முதலில் தோழியிடம் கூறுகிறாள்: தோழி! மன்னனின் செங்கோலும் வெண்குடையும் நிலத்தில் வீழ்ந்தன. ஆராய்ச்சி மணி அடிக்கப்பட்டது. எட்டு திசைகளும் அதிர்ந்தன. கதிரவனை இருள் விழுங்கிற்று. இரவிலே வான வில் தோன்றியது. பகலில் விண்மீன்கள் விழுந்தன. இவ்வாறு கனாக் கண்டேன். இக்கனவை அரசர்க்கு அறிவிப்பேன் - என்றாள். பாடல்;

ஆங்கு.......................... குடையொடு கோல்வீழ, நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென் காண்எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா! விடுங்கொடி வில்இர, வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா!” (1-7)

இது பாடல் பகுதி. எல்லா=தோழீ. கடை மணி= குறை சொல்லி முறையிட வருவோர் அடிக்க வாயிலில் கட்டித் தொங்கும் ஆராய்ச்சி மணி. இர = இரவு. வில் கொடி விடும்=இந்திர வில் எனப்படும் வானவில் வண்ணக் கொடி போல் தோன்றல். 'காண்பென் காண் எல்லா' எனத் திரும்பத் திரும்ப மும்முறை சொல்லியிருப்பது ஒருவகை இலக்கிய காப்பியச் சுவையாகும்.

தோழியிடம் இவ்வாறு தெரிவித்த தன் கனவைத் தேவி பாண்டியனிடமும் கூறினாள்:

“செங் கோலும் வெண் குடையும்
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்,
நங் கோன்றன் கொற்ற வாயில்
மணி நடுங்க நடுங்கும் உள்ளம்,