பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

79


மாறாக, ஆண்கட்கு வலப்பக்கம் துடித்தால் நன்மையும் இடப்பக்கம் துடித்தால் தீமையும் உண்டாகுமாம்.

கண்ணகிக்கு இடப்புறம் துடித்ததால் வரவிருக்கும் நன்மையாவது, இன்னும் அண்மையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியிடம் வரப்போகிறான் என்பதாம். மாதவிக்கு வலம் துடித்ததால் அறியப்படுவது, அண்மையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரியப் போகிறான் என்பது. பாடல்:

“கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென்”

(237-40)

என்பது பாடல் பகுதி. கண்ணகி கண் இடத்தினும் மாதவி கண் வலத்தினும் துடித்தன என நிரல் நிறையாகப் பொருள் கொள்ளல் வேண்டும். எண்ணுமுறை = நிரல்நிறை. Respectively - என்பதற்குத் தமிழ் எண்ணுமுறை.

நாடு காண் காதை

சனி என்னும் கரிய கோள் (கிரகம்) புகைந்து பகை வீடுகளில் சென்று மாறுபட்டிருப்பினும், தோன்றக் கூடாத தூமகேது என்னும் ஒருவகை விண்மீன் தோன்றினும், கிழக்கே தோன்ற வேண்டிய வெள்ளி தெற்கே தோன்றினும் நாட்டிற்குக் கேடாம். இப்பேர்ப்பட்ட நிலையிலும் காவிரியில் தவறாது தண்ணீர் வரும். (இந்தக் காலத்தில்).

“கலியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (102, 103)

இவ்வாறு நிகழ்வதும் தீய நிமித்தமாம்.