பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


"அத்தான்,அந்தக் குழந்தையைப் பாருங்க,

தாயில்லாப் பிள்ளை;பிறந்ததுமே அம்மாவை

விழுங்கி ஏப்பம் விட்டுடுச்சாம்.ஐயோ,பாவம்!"

சுந்தர் திடுக்கிட்டான்.
அட,கடவுளே!

"அக்கா!"என்று ஆனந்தப் பரவசத்துடன் கூப்பிட்டுக் கொண்டே சுமதி வந்து நின்றாள் -தங்க ரதம் மாதிரி! சுமதிக்குச் சர்வநிச்சயமாய் ஆயுசு நூறுதான்!-வந்ததும் வராததுமாக, குழந்தையை உசுப்பிவிட்டால், அது அழாமல் சும்மாவா இருக்கும்? "சுமதி.....பத்திரம்.....பச்சைமண்...மெதுவா எடுக்கு!...கழுத்து சுளுக்கிடப் போகுது!"என்று அக்கா வாய் ஓயாமல் எச்சரிக்கை செய்துகொண்டிருந்தது தங்கையின் காதுகளில் விழுந்தால் தானே? -கச்சிதமாக எண்ணி ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாள் சுமதி!...