பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு

சுசீலாவின் சுமதி

கொடுத்த முத்தங்களைப் பற்றியோ, அல்லது, தொடுத்த எண்ணிக்கையைக் குறித்தோ, பச்சைக் குழந் தைக்கு என்ன கவலை?-அது, தன்பாட்டிலே துரங்கிப்போய் விட்டது. தன் போக்கிலே உறங்கிப் போய்விட்டது!சித்தன்போக்கு, சிவன் போக்குத்தானே?

ஆனல்

சுமதி, அந்தக் குழந்தையை வைத்த கண் வாங்காமல் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிருள்; பார்வையில் அன்பும் பாசமும் துடித்தன; அந்தத் துடிப்புத்தான் தன் இருதயத்தின் துடிப்புக்கு ஆதார சுருதியாக இயங்குவது போலவும் உணரலாளுள் அவள். அ வ் வு ண ர் வு உடலெங்கும் படர்ந்து பரவியதும், அவளது கண்கள் கசியத் தொடங்கின; சூன்யப் பெரு வெளியிலே கைகள் குவிந்தன. எம்பித் தாழ்ந்த இளம் மார்பகத்தில் இரண்டு சொட்டுக் கண்ணிர் தெறித்தது. தென்னம்பாளைச் சங்கிலியில் ஒருதுளி நிவேதனம் ஆனது.

இக்காட்சியைக் காணக்கான, சுந்தரின் மனமும் தளகம் பியது. குழந்தை பேரிலே சுமதிக்குத்தான் எத்தனை பாசம்: