பக்கம்:சீனத்தின் குரல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சீனத்தின் குரல்


துரோகி

தனக்குக் குடிரசுத் தலைமைப் பதவி வந்தவுடனே, முன்பு மகாராணியாருக்கும் மஞ்சு சர்க்காருக்கும் துரோகியாக இருந்ததைப் போலவே குடியரசுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகியாய்விட்டான். தன் சொந்த நலத்தைப் பெருக்குவதற்காக ஜப்பானிடம் ஏராளமான கடன் வாங்கிவிட்டான். தன்னிஷ்டம் போல் நடக்கத் தொடங்கிவிட்டான். இதனால், வெற்றிப் பாதையில் இரண்டோர் அடிகள் தள்ளாடித் தள்ளாடி அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் குடியரசுக் குழந்தை பயத்தால் திரும்பப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைக் கண்டித்த சன்-யாட்-சன்னுக்கு விரோதியாய் விட்டான் யுவான் - ஷி -கே.

மறு மணம்

சன்னின் முதல் மனைவி இறந்து விட்டதால், 1915-ல் தன்னிடம் ஷாங்காயில் காரியதரிசியாக வேலை பார்த்தவளும், சியாங்-கே- ஷேக்கின் மனைவிக்கு மூத்தவளுமான ஷங்-லிங்-சிங் என்பவளை மறுமணம் செய்து கொண்டார். இதன் பிறகு பொதுநலத் தொண்டர்களுக்குக் கிடைக்க வேண்டிய குடல் நோய்தான் சன்யாட்சன்னுக்கு சன்மானமாகச் கிடைக்கிறது. கடைசி காலத்தைக் காட்டும். அறிகுறி. நாட்டின் நோயைப் போக்கிய இவரே ஒரு டாக்டர்தான். எனினும் தன் நோயை ஏன் போக்கிக்கொள்ளவில்லை என்று கேட்க முடியும்,