பக்கம்:சீனத்தின் குரல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சீனத்தின் குரல்


உடனுழைத்த தோழர்கள் யார்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லையென்றோ, அவர் சொல்லவில்லை. அல்லது பொதுப் பணத்தின் ஒரு பகுதியைத் தன் தியாகக் கூலியாக அவர் பெறவில்லை. அவர் தன் மனைவிக்கு விட்டுப்போன சொத்தைப் பாருங்கள். "நான் பிறந்த கிராமத்திலிருக்கும் என் மூதாதையரின் வீடும், என் பழைய உடைகளையுந்தான் என் மனைவிக்கு உரிமையாக்குகின்றேன். இவற்றை அவளுக்கு சொத்தென்று சொல்லமுடியாது, என் நினைவுப் பொருள்களாக வைத்துக்கொள்ளட்டும்."

(ஒப்பம்) சன்வென்.

பழைய வெறி

காலஞ்சென்ற சன் -யாட்-சன் தனக்குப் பிறகு மக்களின் நண்பனாக இருந்து குடியரசை செம்மையாக நடத்துவான் என்று எவ்வளவோ நம்பிக்கையோடிருந்தார் என்பதும், அவர் கண்முன்பாகவே தகாதனச் செய்துவிட்டது மாத்திரமன்னியில் தனக்கு விரோதமாக மாறிவிட்டதையும், சீனம் மீண்டுமோர் நல்லவனைத் தேடியலைய வேண்டியிருக்கின்றதே என்ற சிந்தை கலக்கத்தோடு தன் சிரத்தை சாய்த்தார். அவர் எண்ணியபடி யுவான்-ஷி-கே தன்னை ஒரு சர்வாதிகாரியாக்கிக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டான். பழைய மஞ்சு சர்க்கார் வெறியில் பாதி தனக்கும் உண்டெனக் காட்டிக்கொண்டான். தேரைக்குப் பயந்து தேளை மிதித்ததைப் போலாயிற்று சீனத்