பக்கம்:சீனத்தின் குரல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

69


மற்றோர் குடியாட்சி

1932-ல் Hein Bing ஹெய்ன்-பிங் குடியரசை ஸ்தாபித்துவிட்டார்கள். அதில் சீன ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் அடங்கியிருந்தார்கள். இந்த நேரத்தில் தான் Civil War உள் நாட்டுப்போர் தொடங்கிவிட்டது. இதை சாதகமாக்கிக்கொண்டு, கிடைத்ததை சுருட்டுவோம் என்று ஜப்பான் சைனாவின் மேல் படையெடுத்து மஞ்சூரியாவைப் பிடித்துக்கொண்டது. ஜப்பான் சர்க்காருடைய இந்த அடாத செயலைக் கண்டித்து தாம். இழந்த மஞ்சூரியாவைத் திருப்பித்தர உத்திரவிட வேண்டுமென்று சைனா சர்வதேச சங்கத்துக்கு மனுச் செய்துகொண்டது,

செத்த பாம்பு

சர்வதேச சங்கம் தங்கள் மனுவைக்கண்டவுடனே துள்ளி எழுந்து ஜப்பானைக் கண்டித்து மஞ்சூரியாவை உடனே வாங்கித் தந்துவிடும் என்று நினைத்த சைனா முற்றிலும் ஏமாந்துவிட்டது. பாவம், சர்வதேச சங்கம் ஒரு செத்தபாம்புக்குச் சமானமானது என்று சைனாவுக்குத் தெரியாது. அது செய்த சதியால் சகிக்கமுடியாத அவமானம் கொண்டனர் சீனர்கள். பேரு பெத்தபேரு, தாகனு நீளு லேது, பெயர் மாத்திரம் பெரிய பெயர்தான், ஆனால் குடிக்கத் தண்ணீரில்லை என்று தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப்போல பெயர் - மாத்திரம் சர்வதேச சங்கம், ஒரு பொடிநாடு