பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

94 சீர்திருத்தச் செம்மல்

பெற்றார் பாரதி, மதுரை பஸ்ஸில் காலை 10.30 மணிக்கு வந்து இறங்கினார் கவிஞர்.

காரைக்குடி இந்துமதாபிமான சங்க அன்பர்கள், பாரதியார் நேரே கானாடுகாத்தான் போய் விடுவதற்குச் சம்மதிக்கவில்லை. கவிஞருடன் அளவளாவி அவருடைய கவிதைகளைக் கேட்க விரும்பினார்கள்.

வை.சு. கூறுகிறார்.

"நம் கவிஞர் திலகத்தைக் காலஞ் சென்ற செ.அ.ராம. முருகப்பச் செட்டியார் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அவருடைய தோழருடன் இறக்கினோம். அங்கேயே அவர்களுடைய குளியல், உணவு முடிந்தது."

"நம் கவிஞர் பெருமானின் அழகிய திருவடிவமும், திறமும், மீசை விறைப்பும், அன்புகனிந்து வெடிப்புறப் பேசிய பேச்சும், உணர்ச்சி மிகுந்த நடுங்க வைக்கும் தோற்றத்துடன் நெஞ்சில் பதியுமாறு சொற்களை வீசிய வீரமும், அசையாத தெய்வ பக்தியும், புலமையின் தெளிவும், எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்து விட்டன. தாம் இயற்றிய பாடல்களைப் பண்ணோடும் - உணர்ச்சி யோடும் அவர் பாடியது கேட்டு நம் அன்பர்கள்அளவிலா மகிழ்ச்சிப் பெருக்கடைந்த பிறகு எங்களைப் புறப்பட அனுமதித்தனர்."

"28-10-1919 அன்று மாலை கவியரசர் கானாடு காத்தான் வந்து சேர்ந்தார்கள்...... 1918 டிசம்பரில் புதுவையை விட்டு சென்னை மாகாணத்துக்குத் திரும்பி வந்து, தமது மனைவி யாரின் ஊரான கடயத்தில் வசித்தார் - பாரதியார். அவருக்குப் பல இன்னல்கள் நேர்ந்தன. தமது நூல்களைப் பிரசுரிக்கவும், புதிதாக ஒரு பத்திரிக்கை துவங்கவும் முயன்றார்.