பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 113

'அது அயோக்கியன் செய்கிற வேலை; என்னையுமா அதைச் செய்யச் சொல்கிறீர்கள், முடியாது' என்று மறுத்து விட்டார். வீட்டை இழக்க நேரினும் ஏற்றுக் கொள்ள அணியமாக இருந்தார். நேர்மையிழக்க ஒருப்படவில்லை.

சண்முகனாரின் பதினெட்டாம் வயதில் தொடங்கிய வழக்கு, இறுதிக் காலம் வரை தொடர்ந்து கொண்டே யிருந்தது. வழக்கின் பொருட்டு, அவரடைந்த துன்பங்கள், இழப்புகள் எண்ணிலடங்கா. எனினும் விடாப் பிடியாக நின்றார்.

இவ்வழக்கு, செட்டிநாட்டிலும் மலேயாவிலும் மிக விளம்பர மான வழக்கு. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்ற வழக்கு. ஆதலின் இலக்கங்கள் பல இழக்கும் நிலை ஏற்பட்டுக் குடும்பம் எய்க்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் இன்ப மாளிகை ஏலத்துக்கு வந்து விட்டது. எனினும் உள்ளூரில் அம்மாளிகையை ஏலத்தில் எடுக்க எவரும் முன் வந்திலர். வழக்கில் தொடர்புடைய எதிரியே பணம் கொடுத்து, 'பினாமி' யாக ஒருவரை விட்டு ஏலத்தில் எடுக்கச் செய்து விட்டார்.

இன்ப மாளிகையில் குறுநில மன்னர் போல வாழ்ந்த சண்முகனார், வேறு வீட்டில் குடியிருப்பதை மகன் சோலையும் மகள் பார்வதியும் விரும்பவில்லை. கூடின விலை கொடுத்துப் பெரிய வீடு வாங்கவும் பொருள் வசதியில்லை. அதனால் ஒரு சிறு பழைய வீட்டை மகள் பார்வதி தேடிப்பிடிக்க, மகன் சோலை அதனை விலைக்கு வாங்கித் தர, அவ்வில்லத்தில் சண்முகனார் குடியேறினார்.