பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

114

சண்முகனார் மறைவுக்குப் பின்னர், வழக்கில் எதிரியாக இருந்தவர் இன்ப மாளிகையை இடித்து, இத்தாலியப் பளிங்குக் கற்களினாலும் உயரிய வேலைப் பாடமைந்த மரங்களினாலும் கட்டப்பட்ட வீட்டை இடித்துப் பிரித்தெடுத்து, வெள்ளைக் கற்சுவர்களைக் கூட விடாமற் பிரித்து, அவற்றை விற்றுப் பணமாக்கி விட்டார்.

தலைவர்கள், பாவலர்கள், சான்றோர்கள் பலரின் காலடி பட்ட அந்த இன்ப மாளிகை இன்று தரையோடு தரையாகி, மண்மேடிட்டு, முட்புதர்கள் மண்டிக் காண்போர் கண்ணையும் நெஞ்சையும் கலங்கச் செய்து, கையறுகாட்சி தந்து கிடக்கிறது.